

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்ற சம்பவம், கடும் கண்டனத்துக்கு உரியது. இது இந்திய நீதிமன்றக் கட்டமைப்பின் மாண்பையே அவமதிக்கும் வகையிலான செயல் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. கவாய், உச்ச நீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியாக 2025 மே மாதம் பொறுப்பேற்றார்.
நீதிபதிக்கான வழக்கமான செயல்பாடுகளோடு, இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் சக நீதிபதிகளோடு சென்று மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தியது, உச்ச நீதிமன்றப் பணிகளில் பட்டியல் சாதி, பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டு முறையை முதன்முதலாக அமல்படுத்தியது என்பன போன்ற இவரது நடவடிக்கைகள் தேசிய அளவில் கவனம் பெற்றன.