

வட கிழக்குப் பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில், கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்படி, மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மழைக்காலத்திலும் அதற்குப் பிந்தைய நாள்களிலும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் மக்களிடையே பரவிப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்ப்பதற்காக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் அனைவரும் கள ஆய்வில் ஈடுபட்டு, 20 நாள்களுக்குள் திட்ட அறிக்கையைத் தயாரிக்கும்படி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கேட்டுக்கொண்டுள்ளார்.