

மன அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை முடிவெடுக்கும் போக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தச் சூழலில், அதைத் தடுக்கும் நோக்கத்துடன் வழிகாட்டுதல்களைப் பிறப்பித்து, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2022இல் இந்தியாவில் 13,044 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களில் 2,200 பேர் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.