

யானை வழித்தடங்களின் புதிய பட்டியலை வெளியிடுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்கும்படி தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது; இவ்விஷயத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஜூலை 25க்குள் தாக்கல் செய்யும்படியும் கூறியுள்ளது. காட்டுயிர் ஆர்வலர்களுக்கு ஆறுதல் அளிக்கும் உத்தரவு இது.
தமிழக முதன்மை வனப் பாதுகாவலர் அளித்த தகவல்படி தமிழகத்தில் 36 யானை வழித்தடங்கள் இருப்பதாக 2023இல் தெரியவந்தது. இதைச் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகும் யானை வழித்தடங்களைச் சீரமைப்பதில் ஏன் இன்னும் முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியது.