

தமிழ்த் திரையுலகில் போதைப் பொருள் கலாச்சாரம் நிலவுவது குறித்துப் பூடகமாகப் பேசப்பட்டுவந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் போதைப் பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்டிருப்பது இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. பெரும் பேசுபொருளாகியிருக்கும் இந்த வழக்கு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டால்தான், இத்தகைய குற்றங்களை முழுமையாகத் தடுக்க முடியும் என்கிற குரல்களும் எழுந்திருக்கின்றன.
போதைப் பொருள் கடத்தல், வைத்திருத்தல், விற்பனை செய்தல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்கள் என்றும், போதைப் பொருள் வைத்திருப்பவர் பற்றி ஒருவர் அறிந்திருந்தும் அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கத் தவறினால் அதுவும் குற்றமாகக் கருதப்படும் என்றும் காவல் துறை தெரிவிக்கிறது. ஆனால், சமூகத்தில் போதைப் பொருள் புழக்கத்தையும் பழக்கத்தையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.