திறமைக்கு வாய்ப்பளிக்கும் ‘பிரதிபா சேது’ திட்டம்

திறமைக்கு வாய்ப்பளிக்கும் ‘பிரதிபா சேது’ திட்டம்
Updated on
2 min read

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் நேர்காணல் வரை தேர்ச்சி பெற்றாலும் வேலைவாய்ப்பைப் பெற முடியாதவர்களுக்காக ‘பிரதிபா சேது’ என்கிற திட்டத்தை அறிவித்திருக்கிறது, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி).

குடிமைப் பணித் தேர்வுகளில் இறுதிக் கட்டம்வரை சென்றும் பணி வாய்ப்பைப் பெற முடியாதவர்கள் மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பது பாராட்டுக்குரியது. இதே நோக்கத்துக்காக 2018இல் அறிமுகப்படுத்தப்பட்ட பொது வெளிப்படுத்துதல் திட்டம்தான் (Public Disclosure Scheme) தற்போது ‘பிரதிபா சேது’ திட்டமாக விரிவாக்கப்பட்டுள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in