

சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்கும் நிலையில், அதற்கான பங்களிப்பைத் தரும் அரசு மருத்துவர்களும் செவிலியர்களும் தங்கள் அடிப்படைக் கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டிய நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.
போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்களும் செவிலியர்களும் நியமிக்கப்பட வேண்டும்; ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் நடத்தியுள்ள பாதயாத்திரைப் போராட்டம் அவர்களின் கையறு நிலையையே வெளிப்படுத்துகிறது.