Published : 03 Jun 2025 06:47 AM
Last Updated : 03 Jun 2025 06:47 AM
கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் (ஏ.எஸ்.ஐ.) சார்பில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையில், சில விளக்கங்களை இந்தியத் தொல்லியல் துறை கேட்டிருப்பது விமர்சனத்துக்கு வழிவகுத்திருக்கிறது. இதுதொடர்பாக அரசியல்ரீதியாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மத்திய அரசும், ஏ.எஸ்.ஐ.யும் மறுத்திருக்கின்றன. என்றாலும் இதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தேவையற்ற ஊகங்களுக்கு வித்திட்டிருப்பதைப் புறந்தள்ள முடியாது.
மதுரையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி தொல்லியல் தலத்தை 2014இல் ஏ.எஸ்.ஐ. கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்டறிந்தார். 2014 -2017 காலத்தில் மூன்று கட்டங்களாக ஏ.எஸ்.ஐ. அகழாய்வு மேற்கொண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT