இறந்தோரின் மனித உரிமையும் மதிக்கப்பட வேண்டும்!

இறந்தோரின் மனித உரிமையும் மதிக்கப்பட வேண்டும்!
Updated on
2 min read

உயிரிழந்த ஆதரவற்றோர் சடலங்களைக் கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் என்கிற முதியவர், உறவினர் யாருமில்லாததால் இரந்துண்டு வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். மார்ச், 2018இல் ராஜாராம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு யாரும் உரிமை கோராததால், காவல் துறையினர் அவரை ஆதரவற்றவர் எனக் குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்தனர். அவரது சடலம் அடக்கம் செய்யப்படுவதற்காக சோளிங்கர் பேரூராட்சியின் தூய்மைப் பணியாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ராஜாராமின் சடலம் அரசு மருத்துவமனையிலிருந்து சுடுகாட்டுக்குக் குப்பைவண்டி ஒன்றில் கொண்டுசெல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in