

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையே முதன்முறையாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. துருக்கியில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், ரஷ்ய அதிபர் புதின் நேரடியாகப் பங்கேற்காதது பின்னடைவாகக் கருதப்படுகிறது.
நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முயற்சி செய்ததைத் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் எனப் பிரகடனம் செய்து, அந்நாட்டின் மீது 2022 பிப்ரவரி 24இல் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது.