

தமிழக ரயில்வே பணிகளுக்குத் தொடர்ந்து குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என மத்திய அரசுக்குத் தமிழ்நாடு அரசு வலியுறுத்திவந்த நிலையில், 2025-26 நிதியாண்டுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இது கடந்த நிதியாண்டைவிட (ரூ.6,320 கோடி) அதிகம். திண்டிவனம் - நகரி, தருமபுரி - மொரப்பூர், மதுரை - தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழி), சென்னை - கடலூர் உள்ளிட்ட எட்டு புதிய வழித்தடங்களுக்காக ரூ.621.8 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சில திட்டங்கள் 2007இல் அறிவிக்கப்பட்டவை. புதிய வழித்தடங்களுக்கான நீண்ட காலக் காத்திருப்பு நிறைவுபெறும் என்கிற நம்பிக்கையை இந்த நிதி ஒதுக்கீடு அளித்திருக்கிறது.