

சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழ்நாடு தொழிலாளர் துறை முறையாக நடந்துகொள்ளவில்லை என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை சாம்சங் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருப்பதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன.
பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் நடைபெற்ற சமரச முயற்சியால் தொழிலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என நம்பப்பட்ட நிலையில், கொடுத்த வாக்குறுதிகளை சாம்சங் நிறுவனம் நிறைவேற்றவில்லை என்றும் தொழிலாளர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து, இப்பிரச்சினையில் நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கப்படாதது ஏன் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.