

மருத்துவக் கட்டமைப்பில் தேசிய அளவில் ஒரு முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கும் நிலையில், அதற்கு அடித்தளம் அமைப்பவர்களான செவிலியர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக அடிக்கடி வீதிகளில் இறங்கிப் போராட வேண்டியுள்ளது.
இந்நிலையில், கணிசமான எண்ணிக்கையில் உள்ள ஒப்பந்தச் செவிலியர்களின் நீண்ட காலக் கோரிக்கையான ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்கிற கோரிக்கையை நிறைவேற்றும்படி சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.