யுபிஐ சேவையில் தடங்கல் தவிர்க்கப்பட வேண்டும்

யுபிஐ சேவையில் தடங்கல் தவிர்க்கப்பட வேண்டும்
Updated on
2 min read

இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் 12 அன்று ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனைச் சேவை (யுபிஐ) முடங்கியது. இந்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே யுபிஐ சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். யுபிஐ-யைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், அதில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவது கவலையளிக்கிறது.

டிஜிட்டல் இந்தியாவின் ஓர் அங்கமாக இணையவழிப் பணப்பரிவர்த்தனை முன்மொழியப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் தேசியப் பணப்பரிவர்த்தனைக் கழகத்தின் கீழ் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனைச் சேவையான யுபிஐ 2016இல் தொடங்கப்பட்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in