கச்சத்தீவு விவகாரம்: தீர்க்கமான நடவடிக்கை தேவை

கச்சத்தீவு விவகாரம்: தீர்க்கமான நடவடிக்கை தேவை

Published on

கச்சத்தீவை மீட்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானத்தைத் தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாக இருக்கும் கச்சத்தீவு விவகாரத்தில் தீர்க்கமான நடவடிக்கையை நோக்கி நகர்வது அவசியமாகிறது.

தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை 1974இல் இலங்கைக்கு மத்திய அரசு வழங்கிய பிறகு, இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையின் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடர்கிறது. எல்லை தாண்டி வந்ததாகத் துப்பாக்கிச்சூடு நடத்துவது, கைது நடவடிக்கை, சிறையில் அடைப்பது, படகுகளைப் பறிமுதல் செய்வது, லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பது என இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகிவருகின்றனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in