அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கட்டும் மாணவர் சேர்க்கை!

அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கட்டும் மாணவர் சேர்க்கை!
Updated on
2 min read

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசுப் பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பரப்புரையை அண்மையில் தொடங்கி வைத்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கல்வி ஆண்டு முடியும் முன்பே, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான பணிகளில் தமிழக அரசு ஈடுபடுவது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் உள்ள 37,554 பள்ளிகளில் 52,75,203 மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.

ஒருகாலத்தில், ஆங்காங்கே தனியார் பள்ளிகள் செயல்பட்டு வந்தபோதும், மிக வலுவாக இருந்த அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு, 1990களில் பலவீனம் அடையத் தொடங்கியது. தனியார் பள்ளிகளின் அதிக அளவிலான பரவல், அவை வழங்கிய ஆங்கிலவழிக் கல்வி போன்றவையே காரணம். அரசுப் பள்ளியில் சேர்பவர்கள் தற்போதும்கூடப் பெரும்பாலும் ஏழை, கிராமப்புற மாணவர்கள்தான்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in