Published : 19 Apr 2024 06:30 AM
Last Updated : 19 Apr 2024 06:30 AM

ப்ரீமியம்
ஜனநாயகக் கடமை ஆற்றுவோம்!

இன்று ஒரு மகத்தான நாள். இந்தியாவின் 18ஆவது மக்களவைத் தேர்தலின் முதல் கட்டமாக, தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்குமாக இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. துப்பாக்கித் தோட்டாவைவிட வாக்குச் சீட்டுக்கு வலிமை அதிகம் என்பார்கள். அந்த வலிமையை நாம் அனைவரும் தவறாமல் பயன்படுத்தி, நமது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தருணம் இது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 1951-52 முதல் சீரான இடைவெளியில் தேர்தல்கள் நடத்தப்பட்டுவருகின்றன. தற்போது நடைபெறும் தேர்தலில் 97 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கும் ஜனநாயக வலிமையைப் பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 6,18,90,348 பேர் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். இவர்களில் ஆண்களைவிட (3,03,96,330) பெண்களே (3,14,85,724) அதிகம்; திருநர்கள் 8,294 பேர் வாக்களிக்கவிருக்கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x