Published : 23 Jan 2024 09:43 AM
Last Updated : 23 Jan 2024 09:43 AM

ப்ரீமியம்
குறைந்துவரும் நிலத்தடி நீர்: கூடுதல் கவனம் அவசியம்

தமிழ்நாட்டில், 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்குத் தென்மேற்கு-வடகிழக்குப் பருவமழை முக்கியப் பங்களிக்கிறது. நான்கு பருவங்களிலும் பரவலான மழைப்பொழிவு இருந்தாலும், சராசரி அளவைவிட மழைப்பொழிவு குறைந்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

2022 டிசம்பரைவிட 2023 டிசம்பரில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக இறங்கியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில், 3.72 மீட்டரில் இருந்து 6.32 மீட்டராக நீர்மட்டம் இறங்கியுள்ளது. மேலும், கோயம்புத்தூர் (7.45 மீ. / 9.84 மீ.), திருப்பூர் (4.69 மீ. / 7 மீ.), நாமக்கல் (3.46 மீ. / 5.56 மீ.), சேலம் (2.86 மீ. / 4.63 மீ.), திருச்சி (3.32 மீ. / 5.06 மீ.), பெரம்பலுார் (3.32 மீ. / 5.04 மீ.) ஆகிய மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக இறங்கியுள்ளது. மறுபுறம் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 10 மாவட்டங்களில் நீர்மட்டம் சிறிதளவு உயர்ந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x