Published : 22 Jan 2024 08:04 AM
Last Updated : 22 Jan 2024 08:04 AM

ப்ரீமியம்
ஏசர் அறிக்கை: கற்றல் விளைவுகள் மேம்பட வேண்டும்

இந்தியாவின் கிராமப்புறங்களில் பதின்பருவத்தினரில் கணிசமானோர் அடிப்படைக் கணிதத்திலும், வாசிக்கும் திறனிலும் பின்தங்கியிருப்பதாக, ‘கல்வியின் நிலை குறித்த ஆண்டு அறிக்கை (Annual Status of Education Report - 2023)’ தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது.

‘பிரதம் கல்வி அறக்கட்டளை’ என்னும் அரசுசாரா நிறுவனம், இந்தியாவில் கல்வியின் நிலை குறித்த கணக்கெடுப்பை ஒவ்வோர் ஆண்டும் நடத்தி ‘ஏசர்’ அறிக்கையை வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் ‘ஏசர் 2023: அடிப்படைகளுக்கு அப்பால்’ என்னும் தலைப்பிடப்பட்ட அறிக்கை, 2024 ஜனவரி 17 அன்று வெளியிடப்பட்டது. 26 இந்திய மாநிலங்களில் உள்ள 28 மாவட்டங்களின் கிராமப்புறங்களில் 14-18 வயதுடைய மாணவர்களிடையே இதற்காகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற 25% மாணவர்களால் தமது தாய்மொழியில் இரண்டாம் வகுப்புப் பாடத்தை வாசிக்க முடியவில்லை, பாதிக்கு மேற்பட்டோருக்கு நான்காம் வகுப்புக்குள் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டிய அடிப்படைக் கணக்குகளுக்குத் தீர்வுகாணத் தெரியவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x