Published : 28 Jul 2023 06:25 AM
Last Updated : 28 Jul 2023 06:25 AM

ப்ரீமியம்
தொடரும் வன்கொடுமை: களையப்பட வேண்டிய அநீதி

அரியலூர் மாவட்டம் வாளரக்குறிச்சியில், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவரைக் காலில் விழவைத்து வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பட்டியல் சாதியைச் சேர்ந்த அன்பரசனின் வீட்டு நிகழ்ச்சிக் கொண்டாட்டத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்கச் சாதியினர் இத்தகைய வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. சமூக நீதி மண் என அழைக்கப்படும் தமிழ்நாட்டில், பட்டியல் சாதியினருக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைச் சம்பவங்களின் சமீபத்திய உதாரணம் இது.

ஏற்கெனவே உள்ள சட்டப் பிரிவுகளின் போதாமையால்தான் 1989இல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பட்டியல் சாதியினருக்கு எதிரான வன்முறைகளைக் கணக்கில்கொண்டும் பட்டியல் பழங்குடிச் சமூகத்தினரை உள்படுத்தியும் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x