Published : 06 Jul 2023 06:24 AM
Last Updated : 06 Jul 2023 06:24 AM
தமிழ்நாட்டின் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் சக மாணவரின் குடிநீரில் பூச்சிக்கொல்லியைக் கலந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. நம் பதின்பருவச் சிறார்கள் வளரும் சமூகச் சூழலில் மிகப் பெரிய மாற்றங்கள் உடனடியாகத் தேவைப்படுவதை இதுபோன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துவரும் மாணவர்கள் இருவர் வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு, அதை ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறார் அந்த வகுப்பின் தலைவராக இருந்த மாணவர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் இருவரும் வகுப்புத் தலைவரின் குடிநீர் புட்டியில் பூச்சிக்கொல்லியைக் கலந்துள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT