Published : 06 Jun 2023 06:21 AM
Last Updated : 06 Jun 2023 06:21 AM

ப்ரீமியம்
ரயில் போக்குவரத்து: பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்!

ஒடிஷா மாநிலத்தின் பாலேசோரில் ஜூன் 2 அன்று நடந்த கோர ரயில் விபத்து மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஒரே நேரத்தில் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கி, அதில் 275 பேர் உயிரிழந்திருப்பதும் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதும் ரயில்வே துறையில் பாதுகாப்புப் பணிகள் முறையாக நடக்கின்றனவா என்னும் கேள்வியை எழுப்பியிருக்கின்றன.

ரயில்வே துறையை மறுசீரமைப்பு செய்யப்போவதாக வாக்குறுதி அளித்தவர் பிரதமர் மோடி. எனினும், கடந்த 10 ஆண்டுகளில் அத்துறை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளும் பின்னடைவுகளும் அவரது நோக்கத்தை நிறைவுசெய்வதாக இல்லை. 2017இல் ரயில்வே பட்ஜெட்டைப் பொது பட்ஜெட்டுடன் இணைத்தது மத்திய அரசு. ரயில்வே துறையில் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்காக, ஐந்து ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக, ஒவ்வோர் ஆண்டும் ரூ.20,000 கோடி செலவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x