

எழுத்தாளர்கள் மறைந்துவிடுவார்கள். ஆனால் ‘மாஸ்டர்’கள் மறைவதில்லை. மாஸ்டர் என்ற தகுதியை காலம் எல்லோருக்கும் வழங்கிவிடுவதுமில்லை. காலத்தின் பல்வேறு கேள்விகளுக்கு எவர் பதில் அளிக்கிறாரோ, தான் ஈடுபட்ட துறையில் அதிகபட்ட மேதமையுடன்கூடிய பங்களிப்பை எவர் வழங்குகிறாரோ அவரே மாஸ்டராக அறியப்படுகிறார்.
சுஜாதாவை அவரது தீவிரமான வாசகர்கள் ‘வாத்தியாரே’ என்று அழைப்பது அன்பின் மிகுதியால் அல்ல, அது ஒரு காரணப்பெயர். அவர் வாழ்நாளெல்லாம் கற்றுக்கொண்டே இருந்தார். தமிழ்கூறும் நல்லுலகுக்கு நவீனத்துவத்தின் பல்வேறு பாடங்களை அவர் கற்பித்துகொண்டே இருந்தார்.