மனித மனங்களின் ஆழம் தொட்டவர் | ஜெயந்தன் 90

ஜூன்​ 15 - ஜெயந்​தனின்​ 90வது பிறந்​த தினம்​
மனித மனங்களின் ஆழம் தொட்டவர் | ஜெயந்தன் 90
Updated on
2 min read

எழு​திய காலத்​திலேயே இன்​னும் கூடு​தல் கவனம் பெற்​றிருக்க வேண்​டிய முதன்​மை​யான நவீன எழுத்​தாளர்​களில் ஜெயந்​தனும் ஒரு​வர். கவிதை, கட்​டுரை, சிறுகதை, நாவல், நாடகம் என நவீன இலக்​கி​யத்​தின் அத்​தனை வடிவங்​களி​லும் தடம் பதித்​தவர். ‘கோடு’ சிற்​றிதழ், ‘சிந்​தனைக் கூடல்’ இலக்​கிய அமைப்பு எனத் தன் வாழ்​நாளின் இறு​திவரை இலக்​கி​யத்​திற்​காகவே இயங்​கிய​வர். வறுமை மிகுந்த சூழலில், பள்​ளிப் பரு​வத்​திலேயே உழைத்து படித்​து, பின்​னர் அரசுப்​பணி​யில் படிப்​படி​யாக உயர்ந்​தவர். கால்​நடை ஆய்​வாள​ராக அவர் பெற்ற கள அனுபவங்​களே அவரது பல கதைகளின் மையமாக மாறின.

நாடகத் துறை: நாடகத் துறை​யில் ஆழ்ந்த ஈடு​பாடு கொண்ட ஜெயந்​தன், பேராசிரியர் சே.இ​ரா​மானுஜத்​தின் நாடகப் பயிற்​சிப்​பட்​டறை​யில் நவீன நாடகம் குறித்த பார்​வையைச் செழு​மைப்​படுத்​திக் கொண்​ட​வர். அவர் எழு​திய பன்​னிரண்டு நாடகங்​களில் ‘நினைக்​கப்​படும்’, ‘மனுஷா மனுஷா’, ‘ஆண் தர்​மம்’ ஆகியவை இன்​றும் நினை​வு​கூரத்​தக்​கவை. மகா​பாரதத்​தின் திரவுபதி துகிலுரிதலை மறு​வாசிப்பு செய்த ‘ஆண் தர்​மம்’, ஆண் அதி​கார மையத்​தின் அரசி​யலை இன்​றும் பொருத்​தப்​பாடுடைய அதிர்​வு​களோடு பேசுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in