சவால்களைச் சமாளித்த பெண்கள் | கற்றதும் பெற்றதும் 2025

சவால்களைச் சமாளித்த பெண்கள் | கற்றதும் பெற்றதும் 2025
Updated on
3 min read

‘நாம் செயல்படும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் 300 ஆண்டுகள் கழித்துத்தான் பாலினச் சமத்துவத்தை அடைவோம்’ என ஐ.நா.வின் 2022 ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இப்படியொரு பின்னணியில் இருந்தபடிதான் பெண்கள் ஒவ்வொன்றையும் வென்றெடுக்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 2025இல் வழங்கப்பட்ட சில தீர்ப்புகள் நம்பிக்கை அளித்தன.

நியாயத் தீர்ப்புகள்: பொள்​ளாச்சி பாலியல் வழக்கில் (2019) குற்றம்​சாட்​டப்பட்ட ஒன்பது பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்​பளித்​தார். 48 சாட்சிகளில் ஒருவர்​கூடப் பிறழ்​சாட்​சியம் அளிக்க​வில்லை.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு எதிரான பாலியல் வழக்கில் (2024 டிசம்பர் 23) ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்​பளித்தார் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலஷ்மி.

இதில் திறம்பட விசாரணையை மேற்கொண்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மூவருமே பெண்கள்! பணிப்​பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்​பினரும் முன்னாள் பிரதமர் தேவகௌ​டாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு இறக்கும்வரை சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்​பட்டது மிக அரிய நிகழ்வாக இருந்தது.

பின்னடைவுகள்: உத்தரப் பிரதேச மாநிலம் உனாவில் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்ததோடு அவருக்கு நிபந்தனை பிணை வழங்கிய டெல்லி உயர் நீதிமன்​றத்தின் தீர்ப்பு விமர்​சனத்​துக்​குள்​ளானது. மலையாள நடிகைக்கு எதிரான பாலியல் வழக்கில், நடிகர் திலீப் விடுவிக்​கப்​பட்டது இன்னொரு ஏமாற்றம்.

சிறுமி பாலியல் கொலை வழக்கில் குற்றம்​சாட்​டப்பட்ட தஷ்வந்த், போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்​கப்​பட்டது பெரும் அதிர்​வலைகளை எழுப்​பியது. தமிழ்​நாட்டில் குழந்தை​களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் சிலவற்றில் இரட்டை ஆயுள் தண்டனை, மரண தண்டனை எனக் கடுமையான தீர்ப்புகள் வழங்கப்​பட்ட​போதும் ஆயிரக்​கணக்கான போக்சோ வழக்குகள் தமிழகத்தில் நிலுவையில் இருப்பது பெரும் பின்னடைவே.

போக்சோ நெறிமுறைகள் குறித்துப் போதிய தெளிவின்றிப் பாதிக்​கப்பட்ட குழந்தை​களிடம் நடத்தப்​படும் காவல் நிலைய விசாரணை​களும் நீதிமன்ற அலைக்​கழிப்பு​களும் பெரும் அயர்ச்சி​ அளித்தன. பெண்கள் – சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்​களுக்கான தண்டனை​களைத் தமிழக அரசு கடுமை​யாக்​கியது.

காவல் துறையினர், ஆயுதப் படையைச் சேர்ந்​தவர்கள், ஆசிரியர்கள், மருத்​துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் போன்றோர் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்​களில் ஈடுபட்டால் இரட்டிப்புத் தண்டனை வழங்கப்​படும் என்பதும் பாலியல் குற்ற​வாளிகள் தண்டனைக் காலத்​துக்கு முன்னர் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்பதும் பாராட்​டப்பட வேண்டியவை.

பயிரை மேயும் வேலிகள்: பாலியல் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகும்​கூடக் காவல் துறையைச் சேர்ந்​தவர்​களும் அரசுப் பணியில் இருப்​பவர்​களும் பெண்கள் - சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்​களில் ஈடுபட்டது, சட்டங்கள் செயல்​படுத்​தப்​படு​வதில் உள்ள இடைவெளியைப் பறைசாற்றியது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in