

1901ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசு, உலகளாவிய இலக்கியச் சாதனைகளை அங்கீகரிக்கும் மிக உயரிய விருதாகும். இதுவரையிலான தரவுகளின்படி, பல்வேறு துறைகளில் மொத்தம் 67 பெண்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இதில் இலக்கியத்துக்காக மட்டும் 18 பெண் படைப்பாளிகள் இந்த விருதினை வென்று சாதனை படைத்துள்ளனர்.
தொடக்க காலங்களில் நோபல் தேர்வில் ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. இருப்பினும், 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலிருந்து பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு கணிசமாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இதுவரை ஒரு பெண் எழுத்தாளர் கூட இலக்கிய நோபல் பெறவில்லை என்பது ஒரு குறையே. தகுதியுள்ள பல தமிழ் மற்றும் இந்தியப் பெண் எழுத்தாளர்கள் இருந்தும், முறையான மொழிபெயர்ப்புகள் மற்றும்சர்வதேசப் பரிந்துரைகள் இல்லாததே இதற்குக் காரணமாக அமைகிறது.
இலக்கிய நோபல் வென்ற பெண் ஆளுமைகளின் படைப்புகளை உற்றுநோக்கினால், அவை காலத்துக்கேற்ப சில பொதுவான தன்மைகளைக் கொண்டிருப்பதை உணர முடியும்.