ராமாமிர்தம், இராசேசுவரி, ராஜம் கிருஷ்ணன், சத்தியவாணி முத்து, வி.பாலம்மாள், அன்னை வீரம்மாள்
கட்டுரை வெளியில் பெண்கள்
தமிழ்ச் சூழலில், பெண்கள் கட்டுரைகள் எழுதவில்லை என்னும் கருத்து ஆண்களால் தொடர்ந்து வைக்கப்படுகிறது. பெண்ணொருவர் தமிழில் எழுதி, அச்சில் வெளியான முதல் உரைநடை நூல், 1862ஆம் ஆண்டு அன்னாள் சத்தியநாதன் எழுதிய ‘நல்ல தாய்’ என்னும் நூல். அதைத் தொடர்ந்த இந்த 164 ஆண்டு காலப் பயணம், பல பெண் உரைநடை ஆசிரியர்களைக் கண்டிருக்கிறது.
வி. பாலம்மாள் 1920களில் மதன்மோகன் மாளவியாவின் வரலாற்றை எழுதியவர். ‘திராவிட மதம்’ நூலை எழுதிய பண்டிதை அலர்மேல் மங்கை, 1930களில் இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை எழுதிய கோ.ந. மீனாட்சியம்மாள் ஆகியோரின் எழுத்துப் பணி மிக முக்கியமானது. ‘திருக்குறள் தீபாலங்காரம்’ (1929) என்னும் திருக்குறள் ஜமீன்தாரிணி உரை எழுதியவர் கி.சு.வி. இலட்சுமி அம்மாள். இந்தியா விடுதலை பெற்ற காலகட்டத்தில் அறிவியல் கட்டுரைகளைப் படைத்தவர் ஈ.த.இராசேசுவரியம்மையார்.
