புதிய சட்டங்கள் தொழிலாளர்களைக் காக்குமா?

புதிய சட்டங்கள் தொழிலாளர்களைக் காக்குமா?
Updated on
2 min read

சுதந்திரத்துக்கு முன்பும் (1930 முதல்) பின்பும் இயற்றப்பட்ட 44 மத்திய தொழிலாளர் சட்டங்களில் 15 சட்டங்கள் நீக்கப்பட்டு, எஞ்சிய 29 சட்டங்கள் அமலில் இருந்த நிலையில், அவை நான்கு சட்டத் தொகுப்புகளாகத் தற்போது மாற்றப்பட்டிருக்கின்றன.

தொழிலாளர் துறை பொதுப் பட்டியலில் இருந்தாலும், இந்தச் சட்டங்கள் மூலம் மாநில அரசுகளின் அதிகாரம் குறைக்கப்பட்டு, மத்திய அரசிடம் அதிகாரம் குவிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

ஊ​தி​யங்கள் சட்டத் தொகுப்பு: குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிடும் முறையில், தொழிலா​ளர்​களின் சத்துணவு, இதர தேவைகளுக்கான அளவீடுகள் சந்தை நிலவரத்​துக்கு ஏற்ப இல்லாமல் குறைக்​கப்​பட்​டுள்ளன.

சராசரி வேலைநாளை 8 மணி நேரத்​திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்​த​வும், ‘வேலை நேரப் பரவலை’ 14 முதல் 16 மணி நேரம் வரை நீட்டிக்​கவும் வழிவகை செய்யப்​பட்​டுள்ளது.

‘பணியாளர்’, ‘தொழிலாளர்’ என்கிற வரையறைகள் மூலம் பல தொழிலா​ளர்கள் குறைந்தபட்ச ஊதியப் பாதுகாப்​பிலிருந்து வெளியேற்​றப்​படு​கிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர் சட்டத்​தின்கீழ் உரிமம் பெறத் தேவையான தொழிலா​ளர்​களின் எண்ணிக்கை 20லிருந்து 50ஆக உயர்த்​தப்​பட்​டுள்ளது.

இதனால் 50க்கும் குறைவான தொழிலா​ளர்​களைக் கொண்ட ஒப்பந்​த​தா​ரர்கள் சட்டக் கட்டுப்​பாட்​டிலிருந்து தப்பிப்​பார்கள். பாதுகாப்புச் சட்டங்கள் பொருந்​தக்​கூடிய ‘தொழிற்​சாலை’ என்பதற்கான வரம்பு மின்சா​ரத்​துடன் 20 எனவும், மின்சாரம் இன்றி 40 எனவும் உயர்த்​தப்​பட்​டுள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in