பதிப்பு என்பது அறம்; பணத்தை நோக்கிய பயணமல்ல - வைகறை வாணனின் அனுபவப் பகிர்வு

பதிப்பு என்பது அறம்; பணத்தை நோக்கிய பயணமல்ல - வைகறை வாணனின் அனுபவப் பகிர்வு
Updated on
2 min read

ஆசியாவின் மிகப்பெரிய அறிவுத் திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் சென்னை புத்தகக் காட்சி தொடங்கியுள்ள இந்த தருணத்தில், கார்க்கி நூலகம், பொன்னி, சாளரம் முதலான பதிப்பகங்களை நடத்தியவரும், தமிழின் முன்னோடி பதிப்பாளர்களில் ஒருவருமான வைகறை வாணன் (75) புத்தகப் பதிப்பு, வாசிப்பு, அச்சிடல் குறித்த அரிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

“கை​யால் சுற்​று​வ​தில் ஆரம்​பித்து கால்​களால் இயக்​கும் டிரெடில் எனப்​படும் அச்சு இயந்​திரம் புழக்​கத்​திற்கு வந்​தது. அதுவே மின் அச்​சக​மாக உரு​மாற்​றம் பெற்​று, பிறகு ஆப்​செட் அச்​சக​மாக வடிவம் பெற்​றது. வெப் ஆப்​செட்​டில் உருளை முறை (Cylinder) வந்து ஒரு மணி நேரத்​தில் பல பத்​தா​யிரங்​கள் படி எடுக்​கும் வசதி ஏற்​பட்​டது. இதன் உதவி​யால்​தான் நாளிதழ்​கள் அச்​சடிக்​கப் படு​கின்​றன. லெட்​டர் பிரஸ், ஆப்​செட், லையனோ மோனோ அச்சு இயந்​திரங்​கள், இன்​றைய நவீன அச்​சு​முறை என்ற இத்​தனை அச்​சுக்​கலைத் தலை​முறை​களைப் பார்த்​தவர்​களில் மிச்​சமிருக்​கும் ஓர் ஆள் என்று என்னை சொல்​லிக்​கொள்ள முடி​யும்” என்​கிறார் வாணன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in