அகராதியியல் வழிகாட்டி

அஞ்சலி: பேராசி​யர் வ.ஜெயதேவன்
அகராதியியல் வழிகாட்டி
Updated on
2 min read

கடந்த 45 ஆண்​டு​களுக்​கும் மேலாக அகரா​தி​யியல், மொழிபெயர்ப்​பியல், பதிப்​பியல், இலக்​கணம், இலக்​கி​யத் திற​னாய்வு ஆகிய துறை​களில் சோர்​வின்றி ஆய்​வு​களை மேற்​கொண்​டும், கட்​டுரைகளை எழு​தி​யும், வழி​காட்​டி​யாக​வும் விளங்​கிய பேராசி​யர் வ.ஜெயதேவன், கடந்த பிப். 4 அன்று கால​மா​னார்.

திருச்சி மாவட்​டத்​தி​லுள்ள உப்​பிலி​யாபுரத்​தில் 1947 மே 10 அன்று பிறந்த வ.ஜெயதேவன், அண்​ணா​மலைப் பல்​கலைக்​கழகத்​தில் இளங்​கலை தாவர​வியல் (1969), முதுகலை தமிழ் இலக்​கியம் (1971) பயின்​றவர்.

1979இல் சென்​னைப் பல்​கலைக்​கழகக் கழகத்​தில் ‘தமிழ் அகரா​தி​யியல் வளர்ச்சி வரலாறு’ எனும் தலைப்​பில் முனை​வர் பட்ட ஆய்​வினைச் செய்த ஜெயதேவனுக்​குள் அகரா​தி​யியல் குறித்த கூடு​தல் ஆர்​வ​மும் தேடலும் அன்​றி​லிருந்தே தொடங்​கி​விட்​டது. சென்னை விவே​கானந்தா கல்​லூரி​யில் தமிழ்ப் பயிற்​றுந​ராகத் தனது பணி​யைத் தொடங்​கிய​வர், சென்​னைப் பல்​கலைக்​கழகத்​தின் தமிழ் பேராசிரியர், தமிழ் மொழித்​துறைத் தலை​வர், பதிப்​புத்​துறை இயக்​குந​ராக​வும் 34 ஆண்​டுகள் பணி​யாற்​றி, ஓய்​வு​பெற்​றார். ஓய்​வுக்​குப் பின்​னரும் தகை​சால் பேராசிரியர், தமிழ்ப் பேரக​ரா​தித் திருத்​தப்​பணித் திட்ட முதன்​மைப் பதிப்​பாசிரியர் என 15 ஆண்​டுகள் அயராமல் தமிழ்ப் பணி​யினைத் தொடர்ந்து ஆற்றி வந்​தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in