சான்றான்மைக்கு ஆழி | அஞ்சலி: தெ.​ ஞானசுந்தரம்

வானவில் அரங்கம்
சான்றான்மைக்கு ஆழி | அஞ்சலி: தெ.​ ஞானசுந்தரம்
Updated on
2 min read

இந்​திய நாட்​டின் பிரதமரும், துணைக் குடியரசுத் தலை​வரும், தமிழ்​நாட்​டின் முதலமைச்​சரும் ஒரு தமிழ்ப் பேராசிரியரின் மறைவுக்கு இரங்​கல் செய்​தி​யைத் தெரி​வித்​தார்​கள் என்​றால், அது தெ. ஞானசுந்தரம் மறைவுக்கு மட்​டும்​தான். சமூக ஊடகங்​கள் பலவும் தமிழ்க்​கடல் என்று தெ.​ஞா.வைப் புகழ்ந்​தது மிகையல்ல.

உண்​மை​யில் தெ.​ஞா. தமிழ்க்​கடல்​தான். புது​வைப் பல்​கலைக்​கழகத் தமிழியற்​புலத்​தில் கம்​பன் இருக்​கையை தெ.​ஞா. அலங்​கரித்​த​போது, இசை​ஞானி இளை​ய​ராஜா தெ.​ஞா.வைச் சந்​திக்க வந்​ததை​யும் அவருடன் கலந்​துரை​யாடி மகிழ்ந்​ததை​யும் அரு​கி​லிருந்து பார்த்​துப் பிரமித்​திருக்​கிறேன். சங்க இலக்​கி​யங்​களில் எந்​தப் பாடலை​யும் அதன் உரைகளை​யும் குறிப்​பு​கள் இல்​லாமல் வகுப்​பறை​களில் மட்​டுமல்ல, பல இலக்​கிய மேடைகளில் சரள​மாக அரு​வி​போல் கொட்​டு​கின்ற ஆற்​றல் படைத்​தவர் தெ. ஞானசுந்தரம்.

டி.கே.சி. கம்​பனில் மூழ்​கித் திளைத்​த​தால் சங்க இலக்​கி​யங்​களை நாடிய​தில்​லை. மறைமலைஅடிகள் சங்க இலக்​கி​யங்​களின்​மீது நாட்​டம் கொண்​ட​தால் கம்​ப​ரா​மாயணம் குறித்து எழு​தி​யல்லை என்​பது திற​னாய்​வுல​கம் அறிந்​த செய்​தி. ஆனால் தொல்​காப்​பி​யம் தொடங்​கி, இன்​றைய நவீன இலக்​கி​யம்​வரை ஆழ்ந்து வாசித்​தவர் தெ.​ஞானசுந்தரம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in