அரசுப் பள்ளிகளை உயிர்ப்பித்த ஆசிரியர்கள்

வெ.சுகுணா, மு.காளிமுத்து

வெ.சுகுணா, மு.காளிமுத்து

Updated on
2 min read

இந்தியா முழுவதும், மாணவர்களின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளில் குறைந்துவருவதையும், தனியார் பள்ளிகளில் அதிகரித்துவருவதையும் பார்க்கிறோம். அரசுப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளி, ஓராசிரியர் பள்ளி என்கிற நிலைக்குத் தள்ளப்படுவதையும், சில பள்ளிகள் மூடப்படுவதையும் காண்கிறோம்.

அதேவேளையில், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் மூடப்படும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவுதான். அரசுப் பள்ளி​களைப் பாதுகாப்​ப​திலும் தரம் உயர்த்து​வ​திலும் அரசு, ஆசிரியர்கள், வட்டார மக்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் பொறுப்பு இருக்​கிறது.

இதில் அரசாங்க நிர்வாகத்​துக்​குத்தான் முதன்மைப் பொறுப்பு. தமிழகத்தில் பல அரசுப் பள்ளி​களில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்த​போது, ஆசிரியர்​களின் முயற்​சி​யாலும் தன்னார்​வலர்​களின் பங்களிப்​பாலும் ஊர் மக்களின் உதவியாலும் சில பள்ளிகள் பாதுகாக்​கப்​பட்டன. மாணவர்​களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்

அப்படி ஒரு பள்ளிதான் கோவை மாநகரின் மசக்காளிப்​பாளையம் பகுதியில் இயங்கிவரும் பள்ளி. 1956இல் நகராட்சி ஆரம்பப் பள்ளி​யாகத் தொடங்​கப்​பட்டு, 1966இல் நடுநிலைப் பள்ளி; 1981இல் கோவை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி​யானது. இதில் 2015இல் 125ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 2025இல் 623ஆக (ஐந்து மடங்கு) உயர்ந்தது.

அவர்களில் ஆண்கள் 326, பெண்கள் 297. இப்பள்ளி குறித்து உதவித் தலைமை ஆசிரியர் வெ.சுகுணா சொல்லும் தகவல்கள் பிரமிப்​பூட்டு​கின்றன. நிரந்தர ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு நியமித்த ஆசிரியர்கள் என 20 ஆசிரியர்கள் தற்போது பணியாற்றுகின்​றனர்.

மாணவர்​களுக்குப் பாடங்​களைக் கற்பிப்​பதோடு மாணவர்​களின் திறனை வளர்ப்​ப​தற்​காகப் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்​ளப்​படு​கின்றன. வாரந்​தோறும் சனிக்​கிழமை ‘புத்தகம் இல்லா நாள்’ என்று அறிவிக்​கப்​பட்டு, அந்த நாளில் நடனம், பறை, பேண்ட் வாசிப்பு, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்​படு​கின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in