பாபா சாகேபுக்குத் தமிழர்களின் அஞ்சலி

பாபா சாகேபுக்குத் தமிழர்களின் அஞ்சலி
Updated on
3 min read

டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 5 அன்று வழக்கம்போல் தன் பணிகளில் ஊக்கமாக ஈடுபட்டார்; நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றுவிட்டு டெல்லி அலிபூர் சாலையில் உள்ள தனது இல்லத்துக்குச் சென்றார். இரவு வெகு நேரம்வரை விழித்திருந்து ‘புத்தரும் அவரது கொள்கைகளும்’ நூலுக்கு முகவுரை எழுதினார்.

டிசம்பர் 6 அன்று காலை 6 மணிக்குப் பணியாளர் தேநீர் எடுத்துச்சென்றார். படுக்கையிலேயே அம்பேத்கர் காலமாகிவிட்டதைக் கண்டு அலறினார். அம்பேத்கரின் அறையில் புத்தரின் படங்களும் சிலைகளும் வைக்கப்பட்டன. மனைவி சவிதாதேவி உடனிருந்தார். அம்பேத்கர் மறைந்த செய்தி டெல்லியில் பரவியது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in