பேரவைத் தேர்தல் 2026: வாக்குரிமை அரசியலும் வாக்காளர் அதிகாரமும்

ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை பெறுகின்ற ஜனநாயகம்தான் வாக்குரிமையின் அரசியல்
பேரவைத் தேர்தல் 2026: வாக்குரிமை அரசியலும் வாக்காளர் அதிகாரமும்
Updated on
3 min read

விவசாயத்தையும் குலத் தொழில்களையும் அடித்தளமாக்கிய மன்னராட்சியில் சொத்துடைமையாளர்களுக்கு வழங்கப்பட்ட அரசியலதிகாரம் உழைப்பாளர்களுக்கும் பெண்களுக்கும் மறுக்கப்பட்டது.

பிரிட்டிஷ் இந்தியாவில் நவீனக் கல்வி, தொழில்கள் பரவலான நிலையில், பெண்களும் உழைப்பாளர்களும் அரசியலதிகாரத்தில் பங்கெடுக்க வேண்டிய அவசியத்தை சாதி - வர்க்க, பாலின, ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான இயக்கங்கள் உணர்த்தின.

இக்காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அரசியல் சீர்திருத்தத்தால் அரசாங்கத்துக்கு வரிகள் செலுத்திய சொத்துடைமை கொண்ட ஆண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

இந்தியாவில் 1918இல் நூற்றுக்கு ஆறு பேராக இருந்த வாக்காளர் வீதத்தை அதிகரிக்​க​வும், வாக்காளர்​களுக்கு வரையறுக்​கப்பட்ட வரியைக் குறைக்​கவும் ஆலோசித்ததை ‘ஜனாபி​மானி’ 1918 ஜூனில் பதிவுசெய்திருக்​கிறது.

பம்பாயில் காங்கிரஸின் 1918 செப்டம்பர் கூட்டத்​தில், ‘எந்தச் சீர்திருத்​தங்​களிலும் ஆணுக்கு வகுக்​கப்பட்ட தகுதி​களைப் பெண்களும் பெற்றிருந்தால் பாலினத்தால் அவர்களை விலக்கக் கூடாது’ என்று தீர்மானிக்​கப்​பட்டதன் அடிப்​படை​யில், இந்தியப் பெண்கள் வாக்குரிமை கோரினர்.

பிரிட்​டனில் 1832இல் வாக்களிப்​ப​தற்கான தகுதி​களைப் பெற்றிருந்தும் பெண்களுக்கு வாக்குரிமை மறுக்​கப்​பட்​டிருந்தது; 1918இல் பிரிட்டன் பெண்கள் அதைப் பெற்றதால் தங்களுக்கும் வாக்குரிமை கிடைக்கும் என இந்தியப் பெண்கள் நம்பினர்.

மருத்​துவம், சட்டம் என அனைத்​திலும் திறமை​யுள்ள இந்தியப் பெண்களைப் பொது வாழ்க்கையி​லிருந்து தடுக்​கலாமா என பிரிட்டன் பெண் வாக்குரிமை சங்கத்தைச் சேர்ந்த ஆளுமையான ஃபாசெட் ஆதரவுக் குரல் எழுப்​பி​னார்.

நான்கு அணா வரி

இந்தச் சூழலில், 1918 நவம்பர் 20 தேதியிட்ட சென்னை மாகாண அரசாங்க அறிக்கை வாக்குரிமை சார்ந்த கருத்து​களைக் கேட்டது. சொத்துடைமை, வீட்டுடைமை, வரி என உடைமை​களையே தகுதிகள் ஆக்கலாம் எனச் சிலர் கூறினர்.

அப்படிச் செய்தால் ஒடுக்​கப்​பட்ட, பிற்படுத்​தப்பட்ட வகுப்​பினர் வாக்குரிமையை இழப்பர் என மதராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.பி.​ராமன் மேனன் தெரிவித்​தார். மேலும், இந்துப் பெண்கள் கல்வியில் குறைந்​தவர்கள் அல்லர், கூட்டுக் குடும்பத்தில் பெண்களுக்கும் சொத்துரிமை இருப்​ப​தா​லும், பர்தா முறை இல்லாத​தாலும் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்றார் அவர்.

ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் இருப்​ப​தாலும் வரி செலுத்​தவும் வாக்களிக்​கவும் அவர்களுக்கான பிரதி​நி​தி​களைத் தேர்ந்​தெடுக்கும் அறிவு இருப்​ப​தாலும் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்றார் சீர்திருத்​த​வா​தியான வி.பாலம்​மாள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in