பல்கலைக்கழகங்களுக்குச் சமூகப் பொறுப்பு வேண்டாமா?

பல்கலைக்கழகங்களுக்குச் சமூகப் பொறுப்பு வேண்டாமா?
Updated on
3 min read

ஒரு காலத்தில் அறிவுப் பரவலாக்கம், வாழ்க்கை நெறிகளை வளர்த்தெடுத்தல், தொழில்திறன் உருவாக்கம், சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் போன்றவை பல்கலைக்கழகங்களின் சமூகப் பொறுப்புகளாகக் கருதப்பட்டன.

இந்நிலையில், 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே பல்கலைக்கழகங்கள் வணிக வடிவம் பெற்று, சமூகத்தில் இருந்து வேகமாக விலகி வருகின்றன. இதையடுத்து, பல்கலைக்கழகம் என்பது ‘பட்டம்’ வழங்கும் நிறுவனம் மட்டும்தானா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆழமும் விரிவும்... இன்றைய பல்கலைக்​கழகங்கள் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வ​தில்லை. கல்வி என்பது ஒரு குறிப்​பிட்ட தொழில்​திறனைப் பயிற்று​விப்​ப​தாக​வும், குறிப்​பிட்ட பணிக்கு மாணாக்​கர்​களைத் தயார்​படுத்து​வ​தாகவும் சுருங்கி​விட்டது என்று முன்வைக்​கப்​படும் விமர்​சனங்கள் நிதர்​சன​மானவை. சமூகத்தின் வளர்ச்சி வேகத்​துக்கும் பல்கலைக்​கழகங்​களின் செயல்​பாட்டுக்கும் ஒத்திசைவு இல்லை.

தொழில்​நுட்ப வளர்ச்சி, சமூகத்தின் தேவை ஆகியவற்றுக்கு ஏற்பப் பாடத்​திட்​டங்களை வடிவமைப்​பதும் அதற்கு இசைவாக ஆசிரியர்​களுக்குப் பயிற்சி அளிப்​பதும் சவாலான விஷயங்​கள்​தான். ஆனால், அந்தச் சவாலை எதிர்​கொள்ள இன்றைய பல்கலைக்​கழகங்கள் தயாராக இல்லை.

பொதுவாக, இந்தியப் பல்கலைக்​கழகங்கள் ஆண்டுக்கு ஒரு முறையோ, மூன்றாண்​டு​களுக்கு ஒருமுறையோதான் பாடத்​திட்​டங்களை மாற்றி அமைக்​கின்றன. அதுவும் முழுமையாக இல்லை. சேர்க்கை - நீக்கம் என்கிற அளவிலே உள்ளது! இது ஏஐ யுகம்.

நாளுக்கு நாள் மாறிவரும் தொழில்​நுட்​பங்களை உள்வாங்கிக் கற்றுக்​கொள்​வதற்​கும், பரிசோதனை செய்து பார்ப்​ப​தற்கும் பல்கலைக்​கழகப் பாடத்​திட்​டங்​களில் இடம் இல்லை. பாடத்​திட்​டங்களை வகுப்​பதில் பழைய கோட்பாடுகள், நடைமுறைகள், சிந்தனைப் போக்கு​களில் இருந்து விடுபட முடிய​வில்லை.

உயர் கல்வியை மதிப்பீடு செய்ய அமைக்​கப்பட்ட பல்வேறு வல்லுநர் குழுக்கள் முன்வைக்கும் முக்கியமான குற்றச்​சாட்டு ‘நமது பாடத்​திட்​டங்கள் உள்ளூர்ச் சிக்கல்​களுக்குத் தீர்வு காண முயலவில்லை’ என்பதாகும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in