

முனைவர் இனியன் இளவழகன் மற்றும் ரமேஷ் பெரியசாமி எழுதிய Principals and Techniques of Archaeology: Theory and Practices என்ற நூல், தொல்லியலின் அறிமுகம், தொல்லியல் கற்பதால் ஏற்படக்கூடிய பயன்கள், அறிவியல் பூர்வமாக தொல்லியல் அணுகக்கூடிய முறைகள், தொல்லியல் பொருட்களை ஆய்வுக் கூடத்தில் பகுப்பாய்வு செய்யும் முறைகள், பண்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு அறிவியல் எப்படி தளமாக விளங்குகிறது போன்றவை விளக்கப்பட்டுள்ளன.
மேலும் தொல்லியலின் பல்வேறு பிரிவுகள், தொல்லியலோடு தொடர்புடைய பல்வேறு அறிவியல் மற்றும் கலையியல் புலங்கள் சார்ந்த விவரங்கள், இந்திய மற்றும் உலக அளவில் தொல்லியல் தொடர்பான வரலாறு, தொல்லியலுக்கு பங்களித்த அறிஞர்கள், தொல்லியல் கற்பிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவையும் விளக்கப்பட்டுள்ளன.