குளங்கள் ஆக்கிரமிப்பு: வெள்ளத்தின் அறிகுறி

குளங்கள் ஆக்கிரமிப்பு: வெள்ளத்தின் அறிகுறி
Updated on
3 min read

கடந்த சில ஆண்டுகளாக, வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும்போதெல்லாம் சென்னை முதல் கன்னியாகுமரிவரை மழை வெள்ளம் ஏற்படுகிறது. ஏறத்தாழ 41,127 குளங்கள் மூலம், 347 டி.எம்.சி கொள்ளளவைக் கொண்ட தமிழ்நாட்டில், எப்படி வெள்ளப்பெருக்குகள் அடிக்கடி நிகழ்கின்றன? பெய்யும் மழையின் அளவைவிட, மழைநீரைச் சேமித்து​வைத்து வெள்ள அபாயத்தைத் தடுக்கும் நம் பாரம்பரிய நீர்நிலைகளான குளங்​களின் இன்றைய பரிதாப நிலையே முக்கியக் காரணம்.

நீர்ப்​பிடிப்புப் பகுதிகள், மழைநீரை எடுத்​துச்​செல்லும் வாரி, வாய்க்​கால்கள், நீர்ப்​பரப்புப் பகுதி​களில் நடைபெறும் தொடர் ஆக்கிரமிப்​பாலும், குளங்​களைச் சரிவர ஆழப்படுத்திச் செம்மை செய்யாத காரணத்​தா​லும், அவற்றின் கொள்ளளவு குறைந்து, ஒரு பெருமழைக்​குக்​கூடத் தாக்குப்​பிடிக்க முடியாமல் வெள்ளம் ஏற்பட்டு​விடு​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in