கவிதை உரையாடல் காலத்தின் தேவை

Updated on
2 min read

அண்​மை​யில் எழுத்​தாளர் எம்​.கோ​பால​கிருஷ்ணின் ‘புதுப்​புனல்’ நூலை வாசித்​துக்​கொண்​டிருந்​தேன். 14 புதிய தலை​முறை எழுத்​தாளர்​களின் சிறுகதைகள் மற்​றும் புனை​வுலகு குறித்​தும், அந்​தந்த தொகுப்​பு​களின் பலம், பலவீனங்​கள் பற்​றி​யும் துல்​லிய​மாக எழுதப்​பட்​டிருந்​தது.

அதை வாசிக்​கும்​போது 2010க்​குப் பிற​கான கால​கட்​டத்​தின் கவிதைகள், கவிஞர்​கள் குறித்​தும் விரி​வாக ஒரு நூல் உரு​வா​னால் எப்​படி​யிருக்​கும் என்ற ஏக்​க​மும், ஏன் அவ்​வாறு உரு​வாக​வில்லை என்ற கேள்​வி​யும் எழுந்​தன. ஆண்​டு​தோறும் மிக அதிக எண்​ணிக்​கை​யில் கவிதைத் தொகுப்​பு​கள் வெளிவரும் சூழலில் குறைந்​த​பட்​சம் பத்து தொகுப்​பு​களாவது கவிதைகளின் உயிரனுபவத்தை அளிக்​கும் வகை​யில் இருக்​கின்றன என்று சொன்​னாலும், அவற்​றைக் குறித்த அறி​முக​மும் மதிப்​புரைகளும் மிகமிகக் குறை​வாகவே இருக்​கின்​றன.

கவிதை காலத்தை வெல்​லும் வல்​லமை கொண்​டது, தானாகவே நிலைநிறுத்​திக்​கொள்​ளும் என்​ப​தெல்​லாம் சரி​தான். ஆனாலும் ஒரு கவிதை ஏன் ஆச்​சரியமளிக்​கிறது, ஏன் தொந்​தரவு செய்​கிறது, உட்​சபட்ச கவிதையனுபவம் தரு​கிறது என்​ப​தை, சில கவிஞர்​களைத் தவிர, எழுதி அதனைப் பொருட்​படுத்​தத் தக்​க​தாக மாற்ற எவரும் முயல்​வ​தில்​லை. சிறு குழுக்​களுக்​குள் மட்​டுமே அவை பகிரப்​பட்டு உரை​யாடப்​படு​கின்​றன. நல்ல வாசிப்​பனுபவத்தை அளிக்​கும் கவிதைகள் அறி​முகம் செய்​யப்​பட்​டால்​தான் வாசகர்​கள் மொழியை நோக்கி வரும் சூழல் உரு​வாகும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in