நீங்களும் எழுதத் தொடங்குங்கள்!

நீங்களும் எழுதத் தொடங்குங்கள்!
Updated on
2 min read

அண்ணா நூற்​றாண்டு நூல​கத்​தில் நடை​பெற்ற என்​.எஸ். பிரேமா எழு​திய ‘திருக்​குறள் தெள்​ள​முதம்’ புத்தக வெளி​யீட்டு விழாவுக்​குப் பேச அழைத்​திருந்​தார்​கள். அது நூலாசிரியரின் முதல் புத்​தகம்.

ஆசிரியரைப் பார்த்​து, “இன்று பிறந்​த​நாள் காணும் உங்​களுக்கு வாழ்த்​துகள். உங்​கள் மகள்​கள் உங்​களைத் தாயாக்​கி​னார்​கள்; நீங்​கள் எழு​திய புத்​தகம் உங்​களை நூலாசிரியர் ஆக்​கி​யிருக்​கிறது. முதுகலைப் பட்​டம் பெற்​று, பணிபுரிந்​து, தற்​போது ஓய்​வு​பெற்​றிருக்​கும் உங்​களுக்​குக் கிடைத்​திருக்​கும் புதிய பட்​டம் இது. படித்​துப் பெறும் பட்​டங்​கள் ஒரு​வகை என்​றால், எழு​திப் பெறும் பட்​டம் தனி வகை. தன் ஆயுளுக்​குப் பிறகும் வாழப்​போகும் உங்​களுக்கு மீண்​டும் என் வாழ்த்​துகள்.

திரு​வள்​ளுவர், கம்​பர், மகாத்மா காந்​தி, ஷேக்​ஸ்​பியர், லாவோ சூ போன்ற பெரு​மக்​கள் மறைந்து பல நூறாண்​டு​கள் கடந்​தும், தங்​கள் படைப்​பு​கள் வழியே நம்​மோடும் வருங்​காலத் தலை​முறையோடும் உரை​யாடிக்​கொண்​டிருக்​கிறார்​கள். படைப்​பாளி​களுக்கு இரண்டு பிறப்​பு​கள்​—மனித​னாக ஒன்​று, ஆசிரிய​னாக மற்​றொன்​று. திரு​வள்​ளுவர் போன்​றோர்க்கு இந்​த இரண்​டாம் பிறப்​பின் ஆயுள் சில ஆயிரம் ஆண்​டு​கள்” என்​றேன்.

தொடர்ந்​து, “தமிழில் புத்​தகங்​கள் அதி​கம் விற்​ப​தில்லை என்ற வருத்​தம் உண்​டு. மேலை​நாடு​களில் நடிகர்​களுக்​கும் விளை​யாட்டு வீரர்​களுக்​கும் இணை​யான வரவேற்​பும் வரு​மான​மும் எழுத்​தாளர்​களுக்கு இருப்​பது உண்​மை​தான். ஆனால், எல்​லோரும் எழுத்து மூலமே பிழைக்க வேண்​டும் என்​ப​தில்​லை.

தமிழின் சிறந்த எழுத்​தாளர்​கள் பலர் பகு​திநேர எழுத்​தாளர்​களே. மேலாண்மை பொன்​னு​சாமி சைக்​கிளில் பாத்​திரங்​கள் விற்​றவர்; அசோகமித்​திரன் ஜெமினி ஸ்டூடியோ​வில் பணி​யாற்​றிய​வர்; ‘சா​யா​வனம்’ சா.கந்​த​சாமி போர்ட் டிரஸ்​டில் வேலை பார்த்​தவர்; ஜெய​காந்​தன் கம்​யூனிஸ்ட் கட்சி அலு​வலக ஊழிய​ராகத் தொடங்​கிய​வர்; சுஜாதா பாரத் எலெக்ட்​ரானிக்ஸ் நிறு​வனத்​தி​லும், பால​கு​மாரன் டாஃபே நிறு​வனத்​தி​லும் பணி​யாற்​றிய​வர்​கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in