வணிகப்பொருளாகும் நாவல்கள் | சென்னை புத்தகத் திருவிழா 2026

வணிகப்பொருளாகும் நாவல்கள் | சென்னை புத்தகத் திருவிழா 2026
Updated on
2 min read

படைப்​பிலக்​கி​யங்​கள் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என நான்கு வடிவங்​களில் எழுதப்​பட்​டாலும் அனை​வருக்​கும் பிடித்த வடிவ​மாக நாவல்​தான் இருக்​கிறது. சிறுகதை​யும் நாவலும் புனைகதை என்ற ஒரே பெய​ரால் அழைக்​கப்​பட்​டாலும் இரண்​டும் வெவ்​வேறு வடிவங்​கள். காப்​பிய மரபின் தொடர்ச்சி நாவலுக்​குள் செயல்​படு​கிறது. கதைத் தொடர்ச்​சி​தான் இந்த வடிவத்​தைப் பலரும் விரும்​புவதற்​குக் காரண​மாக இருக்​கிறது. உலகம் முழுக்க படைப்​பிலக்​கி​யத்​தின் சாதனை​யாக எழுத்​தாளர்​கள் நாவலையே கருதுகின்​றனர்.

தமிழ்ச்சூழலும் அப்​படித்​தான் இருக்​கிறது. ஒரு நாவலுக்​குக் கிடைக்​கும் உடனடி அங்​கீ​காரம் பிற படைப்​பிலக்​கிய வடிவங்​களுக்​குக் கிடைப்​ப​தில்​லை. கவிதை, சிறுகதை என நகரும் ஒரு படைப்​பாளர், நாவல் எழு​தி​விட்​டுத்​தான் ஆசு​வாசம் அடைகிறார். நாவல் இலக்​கி​யத்​துக்​குத்​தான் அதிக போட்​டிகளும் நடத்​தப்​படு​கின்​றன. போட்​டிகளுக்​காக எழுதப்​படும் நாவல்​கள் ‘உற்​பத்​திச் சரக்​கு’ என்ற இடத்​தைத்​தான் அடைகின்​றன. பத்​தா​யிரம் ரூபாய் பரிசாக அளிக்​கப்​படும் நாவல் போட்​டிகளுக்​குக்​கூட நூற்​றுக்​கும் மேற்​பட்ட நாவல்​கள் வந்​துசேர்ந்​த​தாகப் போட்டி நடத்​துநர்​கள் பெரு​மிதம் அடைகிறார்​கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in