நவீன விழுமிய வெளிப்பாட்டுக்கான விருது

நவீன விழுமிய வெளிப்பாட்டுக்கான விருது
Updated on
2 min read

இந்த வாரம் முழுதும் முகநூல், புலனம் எனச் சமூக ஊடகங்​களில் எதைத் தொட்​டாலும் பெரு​மாள்​முரு​க​னுக்கு வழங்​கப்​பட்ட ‘மான் பகதூர் சிங் லஹக் விருது’ பற்​றிய பேச்சே நிறைந்​திருந்​தது. ‘ஜனக​வி’ என்று விமர்​சகர்​களால் அழைக்​கப்​பட்ட மான் பகதூர் சிங் இந்​திக் கவிதை உலகில் ஜெயக்​கம்​பம் நட்​ட​வர்; மனித மாண்​புக்கு எதி​ராகச் செயல்​படும் இந்​தி​யக் கிராமங்​களின் சாதி அமைப்​பை​யும் அதி​கார மையங்​களை​யும் வெளிக்​காட்​டிய​வர்; மனி​தாபி​மான​மும் இயற்கை அழகும் கொழிக்​கும் புண்​ணி​யத் தலமாகக் கிராமங்​களைப் புனை​வியல் பாங்​கில் காண மறுத்​தவர்.

ஆங்​கிலப் பேராசிரிய​ராகப் பணி​யாற்​றிய மான் பகதூர் சிங் கல்வி வளாகத்​திலேயே தனிப்​பட்ட காரணங்​களுக்​காக 1996இல் பட்​டப் பகலில் கொடூர​மாகக் கொலை செய்​யப்​பட்​டார். அவர் படைப்​பு​கள் வழி​யாகக் கிடைக்​கும் உரிமைத் தொகை​யில் இயங்​கும் அறக்​கட்​டளை​யும் ‘லஹக்’ கலை இலக்​கியச் சமூக இதழும் இணைந்து இந்த விருதை வழங்​கு​கின்​றன. கொல்​கத்​தா​வில் இருந்து இரு​பது ஆண்​டு​களுக்கு மேலாகச் சிற்​றிதழ் பாரம்​பரி​யத்​தில் வெளிவரும் இந்தி மொழி இதழ் இது. இவ்​விரு​தின் பொருட்​டுப் பெரு​மாள்​முரு​க​னுக்​குச் சிறப்​பிதழை​யும் இவ்​விதழ் கொண்டு வரவுள்​ளது. ‘இந்​திய மொழி ஒற்​றுமை மன்​றம்’ (Indian Language Unity Forum) விருது வழங்​கும் நிகழ்வை முன்​னின்று நடத்​துகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in