தமிழ்த் தேசியம் பேசிய பேராசிரியர்

பே​ராசிரியர்​ ந. சஞ்​சீ​வி​யின்​ நூற்​றாண்​டு நேற்​று மே 2 அன்​று தொடங்​கியது
தமிழ்த் தேசியம் பேசிய பேராசிரியர்
Updated on
2 min read

தமிழ்ச் சமூகம் நினைவுகூர்ந்து கொண்​டாட வேண்​டிய பேராசிரியர்​களுள் ந.சஞ்​சீவி (1927-1988) ஒரு​வர். சைவப் பின்​புலம் உடைய குடும்​பத்​தில் பிறந்​தா​லும், அவர் தம் வாழ்க்​கை​யில் சமயச்​சார்​பற்ற பொது​நிலை​யில் செயல்​படும் மனித​ராகவே இருந்​தார்.

ஆங்​கிலேயர்​கள் நடை​முறைப்​படுத்​திய இரட்டை ஆட்சி முறை​யால், இந்​தி​யர்​களும் ஆட்சி அதி​காரம் பெற்​றனர். இதன் விளை​வாக ‘இந்​தி​யத் தேசி​யம்’ எனும் கருத்து உரு​வானது. தமிழ்​நாட்​டில் தமிழ்த் தேசி​யத்​தோடு இணைந்த இந்​தி​யத் தேசி​யம் என்​பதை ம.பொ.சிவ​ஞானம் (1906-1995) முன்​னெடுத்​தார். பெரி​யார் ஈ.வெ.ரா (1879-1973) இந்​தி​யத் தேசி​யத்​தின் மீது நம்​பிக்கை வைக்​க​வில்​லை. சமூக நீதி மற்​றும் சுயமரி​யாதையை அடிப்​படை​யாகக் கொண்ட தமிழ்த் தேசி​யத்தை முன்​னெடுத்​தார். தமிழ்ப் பேராசிரியர்​கள் சிலர் ம.பொ.சி முன்​னெடுத்த இந்​திய தேசி​யத்​தைப் பேசினர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in