

ந.முத்துசாமி கட்டுரைகள்
தொகுப்பு: சி.அண்ணாமலை
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.400
தொடர்புக்கு: 044-243473378
ந.முத்துசாமி எனும் ஆளுமையை ஒரு நாடகாசிரியராகத்தான் பலருக்கும் தெரியும். ஆனால் அந்த ஆசிரியனுக்குள் பன்முகக் கலை ஆற்றல் எவ்வாறு திரண்டிருக்கிறது என்பதை இந்நூல் தெரிவிக்கிறது.
சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகை, அறுபதுகளில் புதுக்கவிதையை மேம்படுத்த முற்பட்டபோது, ந.முத்துசாமி அதற்கு தோள்கொடுப்பவராக இருந்துள்ளார். மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதிய ந.முத்துசாமி அடுத்து ஒரு நாவலை எழுதக்கூடும் என பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் அவரோ புதுக்கவிதைப் போக்குகளை வளப்படுத்தும் ஆய்வுகளில் ஈடுபட்டார். அதேபோல, ‘எழுத்து’வின் நவீன நாடகங்கள் சார்ந்த தூண்டுதல்தான் ‘கூத்துப்பட்டறை’ என்பதை அவரே பலமுறை சொல்லி வந்துள்ளார்.