பூமணி: கரிசலின் வெக்கையைக் கதைகளில் தந்தவர் | அஞ்சலி

பூமணி: கரிசலின் வெக்கையைக் கதைகளில் தந்தவர் | அஞ்சலி
Updated on
2 min read

1970களின் பிற்​பகு​தி; ஒரு மாலைப்​பொழு​தில் கோவில்​பட்​டி​யில் கவிஞர் தேவதச்​சனின் கடை வாசலில் பூமணியை முதன்​முதலாகச் சந்​தித்​தேன். “புதுசா எழு​திக்​கிட்​டிருக்​காரு” என்று என்னை அறி​முகப்​படுத்​தி​னார் தேவதச்​சன். அன்று இலக்​கி​யத்​தின் பயன்​ம​திப்பு பற்​றிக் கார​சா​ர​மான விவாதம். “ஒரு லீவு லெட்​டருக்கு என்ன பயன்​ம​திப்​போ, அது​தான் கதை கவிதைக்​கும்” என்று பூமணி ஆவேச​மாகப் பேசி​னார்.

அதை தேவதச்​சன் மறுத்​தார். இந்த முதல் சந்​திப்​பைப் போல​வே, பின்​னாளி​லும் சென்​னை, கோவில்​பட்டி என எல்லா சந்​திப்​பு​களி​லும் கலை சார்ந்த அடிப்​படைக் கேள்வி​களையே நாங்​கள் விவா​தித்​திருக்​கிறோம்.

படைப்பு ஆளுமை: பூமணி​யின் ‘வயிறுகள்’ சிறுகதைத் தொகுப்பு வந்​திருந்​தது. அந்​நூலை “எங்​கள் முன்​னத்தி ஏர் கி.​ராஜ​நா​ராயணனுக்​கு” என்று சமர்ப்​பணம் செய்​திருந்​தார். நவீன இலக்​கிய உலகில் ‘முன்​னத்தி ஏர்’ என்ற சொல்​லாடலைத் தொடங்​கிய​வர் பூமணி​தான். கி.ரா கட்​டி​யெழுப்​பிய கரிசல் இலக்​கிய சாம்​ராஜ்ஜி​யத்​தின் பிர​தான அமைச்​சர்​களில் ஒரு​வர் பூமணி; நாங்​களெல்​லாம் அதன் பிரஜைகள். கி.ரா பதிவு செய்த கரிசல் நிலப்​பரப்​பின் விவரிப்​பு​களில் விடு​பட்​டுப்​போன ஒடுக்​கப்​பட்ட மக்​களின் வாழ்​வியலை​யும், அவர்​கள் பார்​வையி​லான நில​வியலை​யும் அழுத்​த​மான கறுப்​பு-வெள்​ளைக் கோடு​களால் தீட்​டிய​வர் பூமணி.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in