மோதி மோதி திறக்​கும் நினைவூசல் | கதை அறியும் கலை

மோதி மோதி திறக்​கும் நினைவூசல் | கதை அறியும் கலை
Updated on
2 min read

அத்​தலை​யும் விளிம்​புநிலை மக்​களின் வாழ்​வுல​கைத் தமிழில் அசலாகத் தந்​தவர் ஜி.​நாக​ராஜன். அதிலொரு கதை ‘யாரோ முட்​டாள் சொன்ன கதை.’

பாக்​கி​யம் என்ற பெண், ஜமீன்​தார் வீட்​டுப் பையனின் மோகத்​தில் விழுகிறாள். அவனால் ஏமாற்​றப்​பட்ட பாக்​கி​யம் லூஸ் மணியை மணந்​து​கொள்ள நேர்​கிறது. பாலியல் தொழில் தரக​ரான பரமன் என்ற ரவுடி​யின் தொடர்பால் பாக்​கி​யமும் அந்தத் தொழிலுக்கு செல்கிறாள். இந்த கெட்ட சகவாசத்​திலிருந்து விடு​படும்​படி கணவன் மணி கெஞ்​சுகிறான். சண்டை போடு​கிறான். அவள் தன் இஷ்டப்​படி நடந்து கொள்​கிறாள். மணி, பரமனுக்​கு​மான வாக்​கு​வாதம் சண்​டை​யாக மாறி கொலை​யில் முடிகிறது. தப்​பிக்க வழி தெரி​யாமல் அவன் ஓடு​கிறான். இது கதை.

பாக்​கி​யத்​தால் சிறுசிறு பயன்​பெறும் பக்​கத்​து​வீட்டு கிழ​வி, கிழ​வன் இவளது இழிதொழிலை தட்​டிக்​கேட்​காமல் இவனது பாமரத்​தன்​மையை ஏசுகிறவினோதத்​தை கதைத் திறக்​கிறது. இவளது போக்கை கட்​டுப்​படுத்த முடி​யாது பிரிந்து விட முடி​வெடுத்த நாளில் ‘‘வீட்டை எழுதி வை, மகனைத் தரமாட்​டேன், ஆறு வருசத்​துக்கு பத்​தா​யிரம் தா’’ என்று சண்​டை​யாக எழுந்து முடிவற்று அடங்​கிப்​போனதைக் காட்​டு​கிறது. இப்​படி எல்​லாத் திக்​கு​களி​லும் முன்​னும் பின்​னு​மாகத் தட்​டி, நினை​வலைகளை எழுப்பி எழுப்பி அவனது முழு​வாழ்க்​கையை நிரப்பி பெருக்கி நிறுத்​துகிறது கதை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in