

மாயத் தன்மையை யதார்த்த உலகத்தில் நிறுத்தி அர்த்தப்பூர்வமாகவும் விமர்சனப்பூர்வமாகவும் விரித்துக் காட்டிய மகத்தான கதைக்கலைஞன் புதுமைப்பித்தன். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆழிப்பேரலையால் தென்மதுரையும் அடுத்து கபாடபுரமும் அழிந்துபோனது என்ற தொன்மக்கதை தமிழ்ப் பண்பாட்்டுக்கே மூலவித்தாக நம்பப்பட்டு வருகிறது. இதைப் பற்றி பேசும் கதை புதுமைப்பித்தனின் ‘கபாடபுரம்’.
சித்தர்களின் அபாரமான மாயசக்தியின் மூலம் நிஜ உலகின் பெருங்கூட்டிலிருந்து பிரிந்து ஆழ்கடல் உலகிற்குள் புகுந்து அழிந்துபோன தமிழரின் தொல்பழங்காலத்து கபாடபுரத்தைக் காண்பதுதான் கதை. எப்போதும்போல் தரிசிக்க வருகிறான் பக்தன் ஒருவன். அவன் கோயிலுக்குள் இருப்பதை அறியாமல் அர்ச்சகன் கதவைச் சாத்திவிட்டுச் சென்றுவிடுகிறான். உள்ளேயே மாட்டிகொண்டு இரவு தங்குகிறான். அவன் குமரிக்கோட்டுடன் பூர்வபந்தம் கொண்டவன்.