தலைகீழாகும் கணிப்​பு​கள் | கதை அறியும் கலை

தலைகீழாகும் கணிப்​பு​கள் | கதை அறியும் கலை
Updated on
2 min read

மனிதர்​கள், நாம் வகுத்து வைத்​திருக்​கும் மதிப்​பீட்டு வரையறை​களை வெகு எளி​தாக மீறி​விடக் கூடிய​வர்​கள் என்​பதை ஆ.மாதவன் தனது பல கதைகளில் வெளிப்​படுத்​தி​யுள்​ளார். மனித மனத்​தின் இருண்ட பக்​கங்​களை ஆழமாக எழு​திய அவரது முக்​கிய​மான கதைகளுள் ஒன்று ‘ஆனைச்சந்தம்’.

உயர்​வகுப்​பைச் சேர்ந்த தமயந்​தி, தட்​டச்​சுப் பயிற்சி நிறு​வனம் ஒன்​றில் பணிபுரி​கிறாள். அங்கு தட்​டச்சு செய்ய வரும் பாஸ்​கர் என்ற தொழிற்​சங்​க​வா​தி​யின் பேச்​சும் தோற்​ற​மும் அவளுக்​குப் பிடிக்கத் தொடங்​கு​கின்​றன.

ஒரு காலில் யானைக்​கால் நோயால் அவதிப்​படும் பாஸ்​கரனின் குறையைக் கனிவோடு அணுகும் தமயந்​தி, ‘நல்ல மனிதனிடம் இக்​குறையைப் பெரி​தாகப் பார்க்​கத் தேவை​யில்​லை’ என எண்​ணுகிறாள். பெற்​றோர் மற்​றும் சுற்​றத்​தா​ரின் பலத்த எதிர்ப்​பை​யும் மீறி இரு​வரும் திரு​மணம் செய்து கொள்​கின்​றனர். ஆனால், நேசித்​துத் தொடங்​கிய அந்த மணவாழ்க்​கை, விரை​வில் கசப்​பாக மாறத் தொடங்​கு​கிறது.

“உங்​களுக்​காகப் பெற்​றோரை​யும் சுற்​றத்​தை​யும் துறந்து வந்​தேன்; எனக்​காக உங்​கள் புலால் ருசி​யைக் கொஞ்​சம் மாற்​றிக் கொள்​ளக் கூடா​தா?” எனத் தமயந்தி கேட்​கும்​போது, “மனத்​தைக் கவரும் பிணைப்​பு​கள் வேறு, நாக்​கின் ருசி வேறு” என்று கூறித் தனக்​குப் பிடித்த பொரோட்​டா-சிக்​கன் ரோஸ்​டைச் சாப்​பிடு​கிறான் பாஸ்​கர். காய்​கறிகளில் இந்த மணம் இருப்​ப​தில்லை என்​பது அவன் வாதம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in