சூழ்ச்சிகளால் நகரும் ஆட்டம் | கதை அறியும் கலை

சூழ்ச்சிகளால் நகரும் ஆட்டம் | கதை அறியும் கலை
Updated on
2 min read

மணிக்​கொடி எழுத்​தாளர்​களுக்​குப் பின், தமிழில் சுமார் 35 ஆண்​டு​கள் கோலோச்​சிய நவீனத்​துவ எழுத்​து​முறை உளவியல், இருத்​தலியல், அந்​நிய​மாதல், வர்க்க முரண்​பாடு ஆகிய​வற்றை அடிப்​படை​யாகக் கொண்டு கதைப் போக்​கைத் தீர்​மானித்​தது. முரண்​களை​யும் சிக்​கல்​களின் வேர்​களை​யும் கச்​சித​மான வடி​வில் முன்​வைக்​கும் இந்த உறு​தி​யான நடை​முறையை முற்​றி​லு​மாகத் தவிர்த்​து, 1980களில் முதன்​முறை​யாக ஒரு மாற்​றுச் சொல்​முறையைக் கையாண்​ட​வர் சுரேஷ்கு​மார இந்​திரஜித்.

நன்​மை, தீமை என மனித குணங்​களைப் பிரிக்​காமல், இரண்​டுமே மனிதனின் இயல்​பூக்​கம் என்ற பார்​வையோடு அவர் எழு​தி​னார். லத்​தீன் அமெரிக்க எழுத்​தாளர்​களின் கதைசொல்​லும் பாணியை உள்​வாங்​கி, சுதந்​திர​மான தொனி​யில் மனித மனவிசித்​திரங்​களைப் பகற்​க​ன​வின் சஞ்​சா​ர​மாக வெளிப்​படுத்​தி​னார். சுரேஷ்கு​மார இந்​திரஜித்​தின் ‘மாபெரும் சூதாட்​டம்’ சிறுகதை இத்​தகைய விசித்​திர​மான சொல்​முறைக்​குச் சிறந்த எடுத்​துக்​காட்​டாகும்.

கதைசொல்​லி​யின் நண்​பன் சூரி; அவனுடைய தாத்தா ஜாதகக் கணிப்​பில் வல்​ல​வர். அவர் எழு​திய நூல் ஒன்​றின் கைப்​பிர​தியை சூரி கதைசொல்​லி​யிடம் தரு​கிறான். அதை அவன் வாசித்​துப் பார்க்​கிறான். சூரி​யின் தந்​தை, சீட்​டாட்​டத்​தில் ஒவ்​வொரு​வரும் செய்​யும் தந்​திரங்​கள், தந்​திரங்​களை​யும் மீறி சீட்​டு​களின் சேர்க்​கை​யால் நிகழும் முடிவு​கள், கணவன்​-மனைவி ஆடும் சீட்​டாட்​டத்​தில் காலப்​போக்​கில் ஏற்​படும் மாற்​றங்​கள், உயர் நீதி​மன்​றத்​திற்​குள் நுழைந்து அலை​யும் அலைச்​சலின் திகைப்​பு, சூரி​யும் கதைசொல்​லி​யும் ஆடிய ஆட்​டத்​தின் கூர்மை என அந்த நோட்​டுப் புத்​தகத்​தின் குறிப்​பு​களோடு கதை முடிகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in