தன் வசமாக்கும் கலை: கதை அறியும் கலை

தன் வசமாக்கும் கலை: கதை அறியும் கலை
Updated on
2 min read

பெண் இருப்​பின் நியா​யங்​களை தனது கதைகளில் தொடர்ந்து பேசிவருபவர் அம்​பை. உயிர்த்​துடிப்பு மிக்க பெண்​கள் உரு​வான அளவு, அம்​பை​யின் கதைகளில் ஆண்​கள் உரு​வாகி வரவில்​லை. ஆனால் ‘மல்லுக்கட்டு’ கதை​யில், அதற்கு மாறாக, ஆண்​ பெண் இயல்​புணர்​வோடு உரு​வாகி உள்​ளனர்.

இசை​ஞானம் மிக்​கவ​ரான கதிர்​வேல் பிள்​ளை​யிடம் இசை​யார்​வம் பெருகி வழி​யும் ஏழைச் சிறுமி செண்​பகம் வந்து சேர்​கிறாள். குரு​வின் மகன் சண்​முகம் தன் தந்​தை​யின் இசை​ஞானம் தனக்​குத் தானாக வந்​து​விடும் என்று மேட்​டிமைத்​தனத்​தோடு கற்​கிறான். மற்ற மாணவர்​களை​விட செண்​பகத்​திடம் அளப்​பறிய இசை​யாற்​றல் புதைந்​திருப்​ப​தைக் கண்ட பிள்ளை, கச்​சேரி​களுக்கு முன் நிறுத்தி வளப்​படுத்​துகிறார்.

சண்​முகம், காதல் என்ற வலை​யில் அவளை வீழ்த்​துகிறான். திரு​மணத்​திற்​குப் பின் அவள் கச்​சேரி செய்​யக்​கூ​டாது என்று தடுத்து முடக்​கு​கிறான். அவனுக்கு வாய்த்த இசையைக் கொண்டு பிரபலமடைகிறான். வீட்​டில் செண்​பகத்​திடம் இசை கற்க வரும் பிள்​ளை​கள் அவளது மேதமையை அறிகின்​றனர். 25 ஆண்​டு​கள் கணவனுக்கு கச்​சேரி​யில் இளஞ்​சூட்டு பால்​ தர​வும், பின்​னால் அமர்ந்து தம்​புரா பிடிக்​க​வு​மாக காலம் கழிகிறது. ஒரே ஒரு சந்​தர்ப்​பம், ஒரு கச்​சேரி​யில் பாடும்​படி சோமு என்ற சிஷ்யனின் குறும்​பால் வாய்க்​கிறது. அச்​சிறிய சந்​தர்ப்​பத்தை பற்​றிக்​கொண்டு பாடு​கிறாள். அற்​புத​மான குரலால் அரங்​கில் கைதட்டு எழுகிறது. அவளது இசை​ஞானம் பொங்​கத் தொடங்​கு​கிறது. கணவன் மிரண்டு போட்​டியை எதிர்​கொள்ள முயல்​கிறான். இது கதை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in