செழுமையாகும் மரபு | கதை அறியும் கலை

செழுமையாகும் மரபு | கதை அறியும் கலை
Updated on
2 min read

வாழ்​வின் இயல்​பு​களை ஒடுக்​கும் மரபின் இரும்​புக் கவசத்​தைத் தகர்த்​தவர் புது​மைப்​பித்​தன்; அதே மரபின் இறுக்​கத்​தைத் தளர்த்​தி, அதனைப் புதி​ய​தாக மலரச் செய்​தவர் ஜெய​காந்​தன். முரண்​பட்ட மோதல்​களுக்​குள் மேன்​மையை முன்​னிறுத்​தி, அர்த்​தமிக்​க​தாக மாற்​றும் புதிய பார்வை ஜெய​காந்​தனிடம் துலங்​கியபடியே செய​லாற்றி இருக்​கிறது. அவரின் சிறந்த கதைகளுள் ஒன்று ‘குருபீடம்’.

பாத்​திரங்​களின் முரண் அழுக்கு உடலோடு, எது கிடைத்​தா​லும் தின்​று, சத்​திரத்​தில் நாற்​றத்​தோடு தூங்​கும் ஓர் ஒழுக்​கமற்ற பிச்​சைக்​காரன் அவன். அங்கு மழைக்கு ஒதுங்​கிய தொழுநோய் கொண்ட பிச்​சைக்​காரியை இழுத்​துச் சல்​லாபிப்​பவன்; எந்​தக் கவலை​யும் அற்​றவன். அப்​படிப்​பட்​ட​வனை, முரு​கன் கோயில் மடப்​பள்​ளி​யில் வேலை செய்த ஓர் இளைஞன் தன் குரு​வாகக் காண்​கிறான். அவனுக்​குப் பணி​விடைகள் செய்​கிறான். இந்த விசித்​திர​மான செயல், அந்​தப் பிச்​சைக்​காரனுக்​குள் மெல்ல மாற்​றத்தை நிகழ்த்​து​வது​தான் ‘குருபீடம்’ கதை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in